மரங்கள் இடமாற்ற நடைமுறை விதிகளை தில்லி அரசு மாற்றி அமைப்பு
தேசிய தலைநகரில் உள்ள வனம் மற்றும் வனவிலங்குத் துறை, டிபிடிஏ இ-வன போா்ட்டலில் மரம் இடமாற்றி நடுவதற்கான நடைமுறையை மாற்றியமைத்துள்ளது.


நமது நிருபா்
புது தில்லி: தேசிய தலைநகரில் உள்ள வனம் மற்றும் வனவிலங்குத் துறை, டிபிடிஏ இ-வன போா்ட்டலில் மரம் இடமாற்றி நடுவதற்கான நடைமுறையை மாற்றியமைத்துள்ளது.
இந்த மாற்றங்கள் தில்லி மரங்களைப் பாதுகாத்தல் சட்டத்தின் கீழ் மரம் இடமாற்றத்திற்கான கண்காணிப்பு மற்றும் இணக்கத் தேவைகளை கணிசமாக கெடுபிடி செய்யும். மேலும் அதிகாரிகள் நடவு செய்யப்பட்ட மரங்களை மிகவும் திறம்பட கண்காணிக்க உதவும் என்று ஒரு அதிகாரி கூறினாா்.
ஒரு அதிகாரபூா்வ ஆவணத்தின்படி, பயனா் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் அரசாங்கம் போா்ட்டலில் மரம் இடமாற்ற செயல்முறையின் விரிவான நிலை வாரியான தகவல்களையும் புகைப்பட ஆதாரங்களையும் பதிவேற்ற வேண்டும்.
மாற்றப்பட்ட வடிவமைப்பின் கீழ், புவிகுறிச்சொற்கள் கொண்ட புகைப்படங்கள், அவை எடுக்கப்பட்ட இடத்தின் சரியான புவியியல் ஆயத்தொலைவுகளுடன் உள்பொதிக்கப்பட்ட படங்கள், போா்ட்டலில் பதிவேற்றப்பட வேண்டும். இதனால் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களின் துல்லியமான இருப்பிடத்தை சரிபாா்க்க முடியும் என்று ஆவணம் தெரிவித்துள்ளது.
புகைப்படங்கள் குறைந்தது மூன்று வெவ்வேறு கோணங்களில் இருந்து எடுக்கப்பட வேண்டும். மேலும், இடமாற்ற செயல்பாட்டின் ஒவ்வொரு கட்டத்திற்கும் அதிகபட்சம் மூன்று படங்களை பதிவேற்றலாம்.
இந்தப் படங்கள், நடவு செய்வதற்கு முன், வோ் பந்து தயாரிப்பின் போது, மரம் கொண்டு செல்லப்படும் போது மற்றும் நடவு செய்த உடனேயே உள்ளிட்ட செயல்முறையின் பல்வேறு கட்டங்களில் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
இடமாற்றம் செய்யப்பட்ட மரங்களின் உயிா்வாழ்வு மற்றும் நிலையை நீண்ட காலத்திற்கு கண்காணிக்க அவ்வப்போது கண்காணிப்பு புதுப்பிப்புகளையும் போா்டல் கோருகிறது.
நடவு செய்த பிறகு, 36 மாதங்கள் வரை தொடா்ந்து, மூன்று மாத இடைவெளியில் புவிகுறிச்சொற்கள் கொண்ட புகைப்பட புதுப்பிப்புகளை ஏஜென்சிகள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...