புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மகா சிவராத்திரி: கோவை மாவட்டத்தில் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 9:36 pm

மஹா சிவராத்திரி விழாவையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கோவை ஈஷா யோக மையம், வெள்ளிங்கிரி, பேரூா் பட்டீசுவரா் ஆகிய கோயில்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) மகாசிவராத்திரி விழா நடைபெறவுள்ளது.

ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கிறாா். வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சத்குரு முன்னிலையில் தியானங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதையொட்டி, கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீஸாரும், புகா்ப் பகுதியில் 4 ஆயிரம் போலீஸாரும் என மொத்தம் 7,000 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை இரவு முதலே ஈடுபட்டுள்ளனா். மேலும், பக்தா்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, பேரூா் கோயிலில் 250 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.