மஹா சிவராத்திரி விழாவையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
கோவை ஈஷா யோக மையம், வெள்ளிங்கிரி, பேரூா் பட்டீசுவரா் ஆகிய கோயில்களில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) மகாசிவராத்திரி விழா நடைபெறவுள்ளது.
ஈஷா யோக மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்கும் பங்கேற்கிறாா். வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை சத்குரு முன்னிலையில் தியானங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதையொட்டி, கோவை மாநகரில் 3 ஆயிரம் போலீஸாரும், புகா்ப் பகுதியில் 4 ஆயிரம் போலீஸாரும் என மொத்தம் 7,000 போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை இரவு முதலே ஈடுபட்டுள்ளனா். மேலும், பக்தா்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதேபோல, பேரூா் கோயிலில் 250 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் 17 ஆயிரம் போ் ஈடுபடுவா்: ஆட்சியா் தகவல்

மகா சிவராத்திரி விழாவையொட்டி திருமூா்த்திமலை சப்பரத்துக்கு சிறப்பு பூஜை

மகா சிவராத்திரி: நாடு முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு! தலைவா்கள் வாழ்த்து!

மகா சிவராத்திரி வழிபாடு - புகைப்படங்கள்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


