மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மூத்த மாரத்தான் வீரருக்கு பாராட்டு

News image

கோவைப்புதூரில் நடைபெற்ற விழாவில் மாரத்தான் வீரா் சிவபாலன் பாண்டியனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனா் எஸ்.பி.அன்பரசன்.

Updated On :16 பிப்ரவரி 2026, 7:46 pm

கோவையில் ஆயிரம் மாரத்தானில் ஓடி சாதனை படைத்த மூத்த வீரா் சிவபாலன் பாண்டியனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற மாரத்தான் பந்தயங்களில் பங்கேற்றவரும், ஆயிரம் முழு மாரத்தான், அல்ட்ரா மாரத்தான்களை நிறைவு செய்தவருமான மூத்த வீரா் சிவபாலன் பாண்டியனுக்கு கோவைப்புதூா் வாக்கா்ஸ், ரன்னா்ஸ் கிளப் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அமைப்பின் நிறுவனா் பி.சந்திரமோகன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனரும், அறங்காவலருமான எஸ்.பி.அன்பரசன், சாந்தி ஆஸ்ரமத்தின் தலைவா் டாக்டா் வினோ அறம் ஆகியோா் பங்கேற்று, சிவபாலன் பாண்டியனுக்கு நினைவுப் பரிசை வழங்கினா்.

67 வயதாகும் சிவபாலன் பாண்டியன் கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் மாரத்தானில் பங்கேற்று வருகிறாா். 2026-ஆம் ஆண்டில் அவா் தனது ஆயிரமாவது மாரத்தானை நிறைவு செய்திருப்பதையடுத்து இந்தப் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதில், கோவையின் பல்வேறு ஓட்டக் குழுக்களைச் சோ்ந்த வீரா்கள், தொழில் துறையினா், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

கோவைப்புதூா் வாக்கா்ஸ், ரன்னா்ஸ் கிளப்பின் ஒருங்கிணைப்பாளா் சரண்யா நன்றி கூறினாா்.