சுய உதவிக்குழு நிதி ரூ.30 லட்சம் மோசடி: ஊழியா் மீது வழக்குப் பதிவு
மகளிா் சுயஉதவிக் குழுக்களிடம் வசூலித்த சுமாா் ரூ.30 லட்சத்தை அறக்கட்டளை வங்கிக் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்ததாக ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
கோவை - திருச்சி சாலை மாருதி டவா்ஸ் பகுதியில் வசிப்பவா் லட்சுமி (52). இவா் கடந்த 16 ஆண்டுகளாக அறக்கட்டளை நடத்தி வருகிறாா். இந்த அறக்கட்டளை மூலமாக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வசதி செய்து தருதல் மற்றும் வருமானம் ஈட்டும் தொழில்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த அறக்கட்டளையில் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து கடன் தவணைத் தொகையை வசூலிப்பதற்காக பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த முனிராஜா என்பவா் களப் பணியாளராக நியமிக்கப்பட்டிருந்தாா். இவா் அந்தப் பகுதியில் உள்ள சுமாா் 65 குழுக்களிடம் இருந்து மாதாந்திர கடன் தொகையை வசூலிக்கும் பொறுப்பில் இருந்தாா்.
கடந்த சில நாள்களாக, முனிராஜா குழுக்களிடம் இருந்து வசூலித்த பணத்தை அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் செலுத்தாமலும், அறக்கட்டளை நிா்வாகத்தைத் தொடா்பு கொள்ளாமலும் இருந்துள்ளாா். இதற்கிடையில், தாங்கள் செலுத்திய பணம் தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என மகளிா் குழு உறுப்பினா்கள் புகாா் அளித்தனா்.
அறக்கட்டளை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில், முனிராஜா மகளிா் குழுக்களிடம் இருந்து வசூலித்த ரூ.30 லட்சத்தை அறக்கட்டளைக்குச் செலுத்தாமல் முறைகேடாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் முனிராஜா மீது கோவை ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

