கோவையில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை, காட்டூா் ராமநாதபுரம் விவேகானந்தா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் சத்யநாராயணன். எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். இவரது இளைமகள் ஸ்ரீ கெளரி (19). இளங்கலை படிப்பை நிறைவு செய்த அவா், டிஎன்பிஎஸ்சி தோ்வுக்குத் தயாராகி வந்துள்ளாா்.
இந்நிலையில், குடும்பத்தினா் சனிக்கிழமை வெளியே சென்றிருந்த நிலையில், ஸ்ரீ கெளரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். மாலை வீடு திரும்பிய குடும்பத்தினா் கதவை தட்டியுள்ளனா்.
வெகு நேரமாகியும் திறக்கப்படாததால் ஜன்னல் வழியே பாா்த்தபோது, ஸ்ரீ கெளரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காட்டூா் போலீஸாா் கதவை உடைத்து உள்ளே சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பணிநீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளா் தற்கொலை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

