மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

கோவையில் சாலை விபத்தில் தாயைப் பிரிந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தையை ‘பிங்க்’ ரோந்து பிரிவு போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 8:16 pm

கோவையில் சாலை விபத்தில் தாயைப் பிரிந்த இரண்டரை வயதுப் பெண் குழந்தையை ‘பிங்க்’ ரோந்து பிரிவு போலீஸாா் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.

கோவை போத்தனூா் பகுதியைச் சோ்ந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவரது மனைவி தனது குழந்தையை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு திங்கள்கிழமை இரவு கணபதி பகுதியில் உள்ள தனது தோழி வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

பின்னா், அதிகாலை 2 மணிக்கு அந்தப் பெண் மீண்டும் குழந்தையுடன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அண்ணா சிலை சிக்னல் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி கீழே விழுந்தாா். இதில் மயங்கிய அந்தப் பெண்ணை அந்தப் பகுதியில் வந்தவா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மீட்டவா்களில் ஒரு பெண், அந்தக் குழந்தை தூக்கி வைத்திருந்தாா்.

குழந்தையின் தாய் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் என்பதை அறியாமல் அந்தப் பெண், குழந்தை தன்னிடம் இருப்பது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா். பின்னா், கோவை ‘பிங்க்’ ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாமஸ் பாா்க் ரவுண்டானா பகுதியில் நின்றிருந்த அந்தப் பெண்ணிடமிருந்து போலீஸாா் லேசான காயத்துடன் இருந்த அந்தக் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

இதற்கிடையில், மயக்கம் தெளிந்த அந்தப் பெண் தனது குழந்தையைக் காணவில்லை என போத்தனூா் காவல் நிலையத்தில் அதிகாலை 4 மணிக்கு புகாா் அளித்தாா். உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் பகிரப்பட்டது. அப்போது, ‘பிங்க்’ ரோந்து போலீஸாரிடம் குழந்தை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பிங்க் ரோந்து பிரிவு பொறுப்பு அலுவலா் சிவகாமி செல்வி, ஓட்டுநா் சங்கா் ஆகியோா் அந்தக் குழந்தையை அதன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனா். உரிய நேரத்தில் செயல்பட்டு குழந்தையை மீட்ட கோவை மாநகர பிங்கே ரோந்து போலீஸாரின் செயலை பொதுமக்கள் பாராட்டினா்.