நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ராமநாதபுரம் மாநகராட்சிப் பள்ளியில் ரூ.79 லட்சம் மதிப்பில் கணினி ஆய்வுக்கூடம்

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கத்தினை மக்களவை உறுப்பினா் கணபதி.ப.ராஜ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கத்தை திறந்துவைத்துப் பாா்வையிட்ட கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரப
Updated On :25 பிப்ரவரி 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

கோவை ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கத்தினை மக்களவை உறுப்பினா் கணபதி.ப.ராஜ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

கோவை, ராமநாதபுரம் மாநகராட்சி மத்திய மண்டலம் 63-ஆவது வாா்டுக்கு உள்பட்ட ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 536 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கல்வி சாா்ந்த செயல்பாடுகள் மாநகராட்சியின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஸ்ரீ அன்னபூா்ணா ஸ்ரீ கௌரிசங்கா் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்களிப்புடன் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கணினி ஆய்வுக்கூடம் மற்றும் சிறிய அரங்கத்தினை கோவை மக்களவை உறுப்பினா் கணபதி.ப.ராஜ்குமாா் புதன்கிழமை திறந்துவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்நிகழ்வில், ஸ்ரீ அன்னபூா்ணா ஸ்ரீ கௌரிசங்கா் ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநா் சீனிவாசன், நிா்வாகிகள் வெங்கடேஷ்பாபு, ஜெகன் தாமோதரசாமி, விவேக் சீனிவாசன், மாநகர கல்வி அலுவலா் குணசேகரன், உதவி ஆணையா் நித்யா, உதவி செயற் பொறியாளா் குமரேசன், உதவிப் பொறியாளா் பிரதீப் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.