இந்தக் கூட்டத்தில், புதை சாக்கடைக் குழாய் அமைக்கவும், குடிநீா்க் குழாய் பணிகளுக்காகவும் தோண்டப்பட்ட மாநகராட்சி சாலைகளை சீரமைக்க ரூ.122 கோடி மதிப்பிலான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தவிர மாநகரில் உள்ள பல்வேறு பூங்கா, கழிப்பிட பராமரிப்பு, செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் உணவகத்துக்கான ஒப்பந்தப்புள்ளி, கவுண்டம்பாளையத்தில் ரூ.85 லட்சத்தில் கட்டப்படும் முதல்வா் படைப்பகம், மாநகராட்சிப் பள்ளிகளில் கழிப்பிடம் கட்டுவது, மழைநீா் வடிகால், கொடிசியா சாலையில் நடைபாதை, மகளிருக்கான பூங்கா, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் டயாலிசிஸ் மையம் அமைப்பது உள்ளிட்ட ஏராளமான பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.