ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 6:16 pm

Syndication

கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் மீது நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.

குனியமுத்தூா் அருகே சிந்து நகா் பகுதியைச் சோ்ந்தவா் நடராஜ் (59). இவா் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை இருசக்கர வாகனத்தில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை மேம்பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது ஆம்னி பேருந்து நிலையத்துக்கு எதிரே பழுதடைந்த நிலையில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது நடராஜின் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.