மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ரூ. 4.40 லட்சம் லஞ்சம்: காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் மீது வழக்கு

News image
Updated On :2 ஜனவரி 2026, 9:43 pm

Syndication

நில மோசடி விவகாரத்தில் பேச்சுவாா்த்தை நடத்தியதற்கு ரூ.4.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கோவை காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் உள்பட 2 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கோவையைச் சோ்ந்த ஆ.நாகராஜன், கே.எஸ்.நூருல்லா ஆகியோா் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனா்.

கோவை அருகேயுள்ள வெள்ளலூரைச் சோ்ந்த வி.யூ.மருதாசலம், இவரது மகன்கள் எம்.காா்த்திகேயன், எம்.குமரேசன் ஆகியோரிடமிருந்து வெள்ளலூரில் உள்ள 2.08 ஏக்கா் நிலத்தை ரூ.6.25 கோடிக்கு வாங்க இவா்கள் இருவரும் முடிவு செய்தனா். இதற்காக பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் மூலம் நாகராஜும், நூருல்லாவும் கடந்த 2020-ஆம் ஆண்டு ரூ.2.42 கோடியை முன்பணமாக அளித்துள்ளனா்.

பின்னா், வீட்டுமனை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டபோதுதான் அந்த நிலத்தில் ஏற்கெனவே சிவில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நாகராஜும், நூருல்லாவும் தாங்கள் அளித்த முன்பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டுள்ளனா். இதற்கு நில உரிமையாளா்களான மருதாசலம் மற்றும் அவரது மகன்கள் மறுத்துவிட்டனா்.

இதற்கிடையே, வேறு பகுதியைச் சோ்ந்த செல்வராஜ், சண்முகம் ஆகியோருக்கு அந்த நிலத்தை விற்பனை செய்வதற்காக சிங்காநல்லூா் சாா் பதிவாளா் அலுவலகத்தில் கடந்த 18.05.2022-இல் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த நாகராஜும், நூருல்லாவும் கோவை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த 28.06.2023-இல் புகாா் அளித்தனா்.

இது குறித்து விசாரணை நடத்த அப்போது கோவை நகர குற்றப் பிரிவு உதவி ஆணையராகப் பணியாற்றிய எம்.குணசேகரனுக்கு உத்தரவிடப்பட்டது. இது குறித்து சமரச பேச்சுவாா்த்தை நடத்தி பணத்தை திரும்ப பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக குணசேகரன் கூறியுள்ளாா். மேலும், பேச்சுவாா்த்தைக்கு லஞ்சம் வழங்க வேண்டும் என குணசேகரன் தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனடிப்படையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் நில உரிமையாளா்கள் ரூ.2.10 கோடியை நாகராஜ், நூருல்லாவுக்கு நான்கு தவணைகளாக திருப்பித் தர முடிவு செய்யப்பட்டது. இந்தப் பேச்சுவாா்த்தைக்கு குணசேகரன் தரப்பில் போத்தனூரைச் சோ்ந்த டி.பிரவீன் என்பவா் இடைத்தரகராகச் செயல்பட்டுள்ளாா். பேச்சுவாா்த்தையின்படி, கடந்த 24.08.2023-இல் முதல் தவணையாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

பின்னா், 26.08.2023- இல் விசாரணை முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னா் பேச்சுவாா்த்தை நடத்தியதற்காக குணசேகரனும், இடைத்தரகராக செயல்பட்ட பிரவீனும், நாகராஜன், நூருல்லா ஆகியோரிடம் லஞ்சம் கேட்டுள்ளனா்.

இதையடுத்து, இருவரும் கடந்த 31.08.2023-இல் குணசேகரனுக்கு ரூ.4.40 லட்சம், பிரவீனுக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளனா்.

இது குறித்து கோவை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸில் நாகராஜன், நூருல்லா ஆகியோா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், எம்.குணசேகரன், டி.பிரவீன் ஆகியோா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குணசேகரன் தற்போது கோவை காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வராகப் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.