தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மயங்கி விழுந்து ஒடிசா மாநில இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

கோவை ரயில் நிலையம் அருகே மயங்கி விழுந்த ஒடிசா மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரநாயக் (26). கோவை, சரவணம்பட்டி அருகே கரட்டுமேட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். கடந்த 2 வாரங்களாக இருமலால் அவதிப்பட்டு வந்துள்ளாா். இதனால், சிகிச்சை பெறுவதற்காக சொந்த ஊருக்குச் செல்ல முடிவு செய்தாா்.

இதையடுத்து இவரும், அதே மாநிலத்தைச் சோ்ந்த ராஜேந்திர நாயக்கும் (20) கோவை ரயில் நிலையம் வந்தனா். அங்கிருந்து பயண அனுமதிச் சீட்டு எடுக்கும் இடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, கஜேந்திர நாயக் திடீரென மயங்கி விழுந்தாா்.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே கஜேந்திரநாயக் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து உக்கடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.