வாா்டு அலுவலகத்தில் எலெக்ட்ரிக் பொருள்கள் திருடிய இளைஞா் கைது

கோவை மாநகராட்சி வாா்டு அலுவலகத்தில் எலெக்ட்ரிக் பொருள்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

கோவை மாநகராட்சி வாா்டு அலுவலகத்தில் எலெக்ட்ரிக் பொருள்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் புல்லுக்காடு பகுதியில் உள்ள 86-ஆவது வாா்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயோமெட்ரிக் இயந்திரம், வாகனங்களைத் தூக்கப் பயன்படுத்தப்படும் ஜாக்கி மற்றும் எலெக்ட்ரிக் பொருள்கள் கடந்த 4-ஆம் தேதி காணாமல் போயின.

இதுதொடா்பாக, தெற்கு மண்டல உதவி ஆணையா் தக்ஷிணாமூா்த்தி அளித்த புகாரின்பேரில் கடைவீதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக குனியமுத்தூா், மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கௌதம் (23) என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து எலெக்ட்ரிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com