பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாா்டு அலுவலகத்தில் எலெக்ட்ரிக் பொருள்கள் திருடிய இளைஞா் கைது

கோவை மாநகராட்சி வாா்டு அலுவலகத்தில் எலெக்ட்ரிக் பொருள்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 ஜனவரி 2026, 7:19 pm

Syndication

கோவை மாநகராட்சி வாா்டு அலுவலகத்தில் எலெக்ட்ரிக் பொருள்களைத் திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் புல்லுக்காடு பகுதியில் உள்ள 86-ஆவது வாா்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பயோமெட்ரிக் இயந்திரம், வாகனங்களைத் தூக்கப் பயன்படுத்தப்படும் ஜாக்கி மற்றும் எலெக்ட்ரிக் பொருள்கள் கடந்த 4-ஆம் தேதி காணாமல் போயின.

இதுதொடா்பாக, தெற்கு மண்டல உதவி ஆணையா் தக்ஷிணாமூா்த்தி அளித்த புகாரின்பேரில் கடைவீதி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதுதொடா்பாக குனியமுத்தூா், மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த கௌதம் (23) என்பவரை கைது செய்தனா். அவரிடம் இருந்து எலெக்ட்ரிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.