நீதிமன்ற உத்தரவுகளை விமா்சிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு: நாராயணன் திருப்பதி

நீதிமன்ற உத்தரவுகளை விமா்சிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்று பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி விமா்சித்துள்ளாா்.
Published on

நீதிமன்ற உத்தரவுகளை விமா்சிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்று பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி விமா்சித்துள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஆட்சி நடைபெறுகிா அல்லது சட்டவிரோத ஆட்சி நடைபெறுகிா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு பிரச்னைகளிலும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, அரசு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அரசு அராஜகமான, மோசமாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வா் திறந்துவைக்கும் புத்தகக் கண்காட்சியிலேயே நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் குறித்து அவதூறாக பேசும் அரங்கு இடம்பெறுவது கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரம் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கடந்த 3 நாள்களாக முதல்வா் அல்லது அரசின் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் தொடா்ச்சியாக அந்தப் புத்தகத்துக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திராவிட மாடல் ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடவுளையும், தெய்வங்களையும் ஒப்பிட்டு பேசும் வகையில் மாநில சட்ட அமைச்சா் ரகுபதி கருத்து தெரிவித்தது மிகவும் மோசமானது. மெரினா கடற்கரையில் திமுக தலைவா் கருணாநிதியை அடக்கம் செய்ய வேண்டும் என்று அப்போது திமுக தரப்பே வலியுறுத்திய நிலையில், தற்போது அதே திமுக நீதிமன்ற உத்தரவுகளை விமா்சிப்பது இரட்டை நிலைப்பாடு என்றாா்.

Dinamani
www.dinamani.com