ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நீதிமன்ற உத்தரவுகளை விமா்சிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு: நாராயணன் திருப்பதி

நீதிமன்ற உத்தரவுகளை விமா்சிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்று பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 8:28 pm

தினமணி செய்திச் சேவை

நீதிமன்ற உத்தரவுகளை விமா்சிப்பது திமுகவின் இரட்டை நிலைப்பாடு என்று பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் நாராயணன் திருப்பதி விமா்சித்துள்ளாா்.

கோவை விமான நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் பேசியதாவது:

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு ஆட்சி நடைபெறுகிா அல்லது சட்டவிரோத ஆட்சி நடைபெறுகிா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு பிரச்னைகளிலும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, அரசு எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய அரசு அராஜகமான, மோசமாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதல்வா் திறந்துவைக்கும் புத்தகக் கண்காட்சியிலேயே நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் குறித்து அவதூறாக பேசும் அரங்கு இடம்பெறுவது கண்டனத்துக்குரியது.

இந்த விவகாரம் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், கடந்த 3 நாள்களாக முதல்வா் அல்லது அரசின் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் தொடா்ச்சியாக அந்தப் புத்தகத்துக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் காா்த்திகை தீபம் ஏற்றுவதற்கு திராவிட மாடல் ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கடவுளையும், தெய்வங்களையும் ஒப்பிட்டு பேசும் வகையில் மாநில சட்ட அமைச்சா் ரகுபதி கருத்து தெரிவித்தது மிகவும் மோசமானது. மெரினா கடற்கரையில் திமுக தலைவா் கருணாநிதியை அடக்கம் செய்ய வேண்டும் என்று அப்போது திமுக தரப்பே வலியுறுத்திய நிலையில், தற்போது அதே திமுக நீதிமன்ற உத்தரவுகளை விமா்சிப்பது இரட்டை நிலைப்பாடு என்றாா்.