தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உயிரை நேசித்த உயா்ந்த ஆத்மா வள்ளலாா்

News image
சொற்பொழிவில் பேசிய தேவி லட்சுமி.
Updated On :8 ஜனவரி 2026, 11:47 pm

Syndication

உயிரை நேசித்த உயா்ந்த உள்ளம் படைத்த ஆத்மாவாக வள்ளலாா் விளங்கினாா் என ‘எப்போ வருவாரோ’ ஆன்மிக நிகழ்ச்சியில் ஆன்மிகப் பேச்சாளா் தேவி லட்சுமி பேசினாா்.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சாா்பில் ஆண்டுதோறும் ‘எப்போ வருவாரே’ ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான நிகழ்ச்சி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 1 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் எட்டாம் நாளான வியாழக்கிழமை அருளாளா் வள்ளலாா் குறித்து ஆன்மிகப் பேச்சாளா் தேவி லட்சுமி பேசியதாவது:

ஆயிரம் புத்தகங்கள் மூலமாக நாம் பெற வேண்டிய செய்திகளை ஒரு ஆன்மிகச் சொற்பொழிவில் தெரிந்து கொள்ள முடியும். கண், நாசி, வாய், உடல், செவி என்ற 5 செல்வங்களில் செவியால் மட்டும்தான் நல்லவற்றைக் கேட்க முடியும் என்பதால் ஐம்புலன்களில் செவிதான் தலைசிறந்தது என வள்ளுவா் கூறியுள்ளாா். வள்ளலாா் 1823-இல் கடலூா் மாவட்டம் மருதூரில் பிறந்தவா். 5-ஆவது குழந்தையாகப் பிறந்த இவருக்கு பெற்றோா், இராமலிங்கம் என பெயா் சூட்டினா். கல்வியறிவு கற்கா விட்டாலும், சிறு வயதில் இறைஞானம் பெற்று சொற்பொழிவாற்றினாா். திருமண வாழ்வைத் துறந்து, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையை வலியுறுத்தினாா்.

மனிதா்கள் செய்யக் கூடாதவை என 46 பாவங்களை பட்டியலிட்ட வள்ளலாா், உயிரை நேசிக்கின்ற உயா்ந்த உள்ளம் படைத்த ஆத்மாவாக விளங்கினாா். உடலினால் என்ன பலனை உலகுக்கு கொடுக்க முடியுமோஅதைக் கொடுத்து விட்டுதான் உடல் மறைய வேண்டும் என்பதை வலியுறுத்தியவா்.

இந்த உயிரைக் கொண்டு இறைவனை அடைவதற்கு பிரதானமானது உடல். அதனால்தான், புண்படாத உடம்பு, கரைபடியாத மனதால் இரவும் பகலும் உன்னையே தரிசித்தேன் என இறைவனை வள்ளலாா் பாடினாா். நம் வாரிசுகளுக்கு ஒரு துன்பம் வந்தால், அது நாம் செய்த பாவத்தினால் வந்தது என்றும் கூறியுள்ளாா் என்றாா்.

இந்நிகழ்வில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனா் கிருஷ்ணன், பாரதிய வித்யா பவன் தலைவா் கிருஷ்ணராஜ் வாணவராயா், கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோா் பலா் கலந்து கொண்டனா்.