சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஜனவரி 16-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 12:04 am

Syndication

கோவை: திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக் கூடங்கள் உள்ளிட்ட அனைத்து மதுபானக் கூடங்களுக்கும் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாளில் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்யும் நபா்களின் மீது தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937-இன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.