இந்தப் பணிகள் மாா்ச் மாதத்தில் நிறவடையும்போது, 60 மில்லியன் லிட்டா் மழைநீா் சேகரிக்கப்படுவதுடன், அந்தப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டமும் உயரும். இதன் மூலமாக அந்தப் பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவாா்கள். சுற்றுச்சூழல் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள அரங்கில் வைல்டு தமிழ்நாடு என்ற ஆவணப்படம் ஜனவரி 26-ஆம் மாலை 5.30 மணிக்கு திரையிடப்படவுள்ளது. இதில், வசூலிக்கப்படும் டிக்கெட் தொகையானது மரக்கன்றுகளை நடுவதற்கும், பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படும்.