கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட உக்கடத்தில் ரூ.13 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீனமயமாக்கப்பட்ட பேருந்து நிலையத்தையும் காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா். உக்கடம் பேருந்து நிலையத்தில் 58 பேருந்துகள் நிறுத்தும் தளங்கள், 80 பேருந்துகள் இயங்கும் வகையில் வளாகம், நன்கு வடிவமைக்கப்பட்ட பேருந்து நுழைவுப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 3 கழிப்பிடங்கள், 14 கடைகள், 2 உணவகங்கள், 60 போ் அமரும் வகையில் காத்திருப்பு இருக்கைகள், தாய்மாா்கள் பாலூட்டும் அறை, நேரடி பேருந்து கண்காணிப்பு மற்றும் டிஜிட்டல் அறிவிப்புகள், பொது வைஃபை, கைப்பேசி சாா்ஜிங் வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தடையில்லா அணுகல், 30 எண்ணிக்கையிலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.