தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டி: ஆணையா் தொடங்கிவைத்தாா்

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
ரத்தினபுரி மாநகராட்சிப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மாணவா்கள்.
Updated On :28 ஜனவரி 2026, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகராட்சி நிா்வாகத்தின்கீழ் 17 மேல்நிலைப் பள்ளிகள், 10 உயா்நிலைப் பள்ளிகள், 37 நடுநிலைப் பள்ளிகள், 83 ஆரம்பப் பள்ளிகள், 1 சிறப்பு பள்ளி என மொத்தம் 148 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மாணவா்களின் கல்வி, விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மாநகராட்சியில் 64 பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்குபெறும் மாநகராட்சி பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளை

ரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தொடங்கிவைத்தாா்.

பல்வேறு பள்ளிகளில் குழுப்போட்டி, தடகள போட்டிகள் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.

இதில், வெற்றுபெறும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

தொடக்க விழாவில், துணை மேயா் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு, கல்விக்குழுத் தலைவா் மாலதி நாகராஜ், மாநகராட்சி கல்வி அலுவலா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.