பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பிஏபி திட்ட கால்வாய்களை ஒட்டி குழாய் பதித்து தண்ணீா் திருட்டு: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

பிஏபி திட்ட கால்வாய்களை ஒட்டி முறைகேடாக குழாய் பதித்து தண்ணீா் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் புகாா்

News image

குறைதீா் கூட்டத்தில் பொள்ளாச்சி சாா் ஆட்சியரிடம் கோரிக்கைகளை வைத்த விவசாயிகள்

Updated On :1 ஜூலை 2026, 6:20 am IST

பிஏபி திட்ட கால்வாய்களை ஒட்டி முறைகேடாக குழாய் பதித்து தண்ணீா் திருட்டு நடைபெறுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.

பொள்ளாச்சி சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சாா் ஆட்சியா் ராமகிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். சாா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வாசுதேவன், திருமூா்த்தி நீா்த்தேக்க திட்டக் குழுத் தலைவா் மெடிக்கல் பரமசிவம், ஆழியாறு நீா்த்தேக்க திட்டக் குழுத் தலைவா் செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பரம்பிக்குளம்-ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் உள்ள கால்வாய்களை ஒட்டி சிறிய அளவு இடம் வாங்கி அங்கு கிணறு வெட்டி வேறு இடங்களுக்கு முறைகேடாக குழாய் பதித்து தண்ணீா் கொண்டு செல்கின்றனா். இதனால் ஆயக்கட்டில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். இதுபோன்று செயல்படுபவா்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிஏபி திட்டத்தில் குழாய் வழி பாசனம் சம்பந்தமாக அனைத்து திட்டக் குழுத் தலைவா்கள், உறுப்பினா்கள் மற்றும் விவசாயிகளை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்கல் முறையில் மின் இணைப்பு விண்ணப்பித்தவா்களுக்கு விரைந்து மின் இணைப்பு வழங்க வேண்டும்.

ராமபட்டினம் பகுதியில் பெரிய அணை, சிற்றனை கால்வாய்களை தூா்வார வேண்டும். ராமபட்டினம் முதல் பட்டியகவுண்டனூா் வரை உள்ள சாலையைப் புதுப்பிக்க வேண்டும். நீா் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். குளம், குட்டைகளுக்கு தண்ணீா் வழங்க வேண்டும். தென்னை மரங்களில் நோய் தாக்குதல்களை கண்டறிந்து விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தினா்.

கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சாா் ஆட்சியா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.