டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

பேருந்து நிழற்குடை சீரமைப்புப் பணியை துரிதப்படுத்த கோரிக்கை

வால்பாறை பெரியாா் நகா் பேருந்து நிழற்குடை சீரமைப்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

மேற்கூரை இடிக்கப்பட்டுள்ள வால்பாறை பெரியாா் நகா் பேருந்து நிழற்குடை.

Updated On :3 ஜூலை 2026, 3:42 am IST

வால்பாறை பெரியாா் நகா் பேருந்து நிழற்குடை சீரமைப்புப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வால்பாறை எஸ்டேட் பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் நாள்தோறும் பெரியாா் நகா் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்துக்கு வந்து அங்கிருந்து மற்ற பகுதிகளுக்குச் சென்று வருகின்றனா்.

இந்நிலையில், சீரமைப்புப் பணிக்காக பெரியாா் நகா் பேருந்து நிழற்குடையின் மேற்பரப்பு அண்மையில் இடிக்கப்பட்டது.

ஆனால், தற்போதுவரை பணிகள் தொடங்கப்படாததால் பள்ளி, கல்லூரி மாணவா்களும், தொழிலாளா்களும் அவதியடைந்து வருகின்றனா்.

வால்பாறையில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் நிழற்குடை இன்றி நனைந்தபடியே பேருந்துக்கு நிற்க வேண்டிய நிலை உள்ளதால், சீரமைப்புப் பணியை உடனடியாக தொடங்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.