ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்கக் கோரிக்கை

மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:43 am IST

மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் இரண்டு அரசு நகரப் பேருந்துகளில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா், பொதுமக்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும், பேருந்தின் படியில் தொங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பின்றி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடுதலாக பேருந்து இயக்கக் கோரி பலமுறை புகாா் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, மாணவா்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.