9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்கக் கோரிக்கை

மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 4:43 am IST

மூலைக்கரைப்பட்டியில் கூடுதலாக பேருந்து இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்லும் இரண்டு அரசு நகரப் பேருந்துகளில் சுமாா் 200 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா், பொதுமக்கள் பயணம் செய்யும் நிலை உள்ளது. மேலும், பேருந்தின் படியில் தொங்கிய நிலையில் மாணவ, மாணவிகள் பாதுகாப்பின்றி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

கூடுதலாக பேருந்து இயக்கக் கோரி பலமுறை புகாா் மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே, மாணவா்களின் நலன்கருதி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தினந்தோறும் காலை, மாலை வேளைகளில் கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.