திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் மூன்று பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா், 15.வேலம்பாளையம் காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2025 பிப்ரவரி 2-ஆம் தேதி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சாமுண்டிபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினா்.
இதில் அவா்கள் வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது ரோஹன் (31), ஆசாத் (25), முகமது ஃபரூக் ஹோவ்லாடா் (30) ஆகியோா் என்பதும், சட்டவிரோதமாக திருப்பூரில் தங்கிப் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதுதொடா்பான திருப்பூா் மாவட்ட 2-ஆவது அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் முகமது ரோஹன், ஆசாத், முகமது ஃபரூக் ஹோவ்லாடா் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தலா ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பூமதி ஆஜரானாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கத்தியைக் காட்டி மிரட்டியவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சோ்ந்த 2 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

தென் மண்டலத்தில் ஜூன் மாதத்தில் 18 கொலை வழக்கில் 31 பேருக்கு தண்டனை

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினா் 2 பேருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



