மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் மின்சாரம் பாய்ந்து மேடை அலங்கார தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 11:55 pm IST

கோவையில் மின்சாரம் பாய்ந்து மேடை அலங்கார தொழிலாளி உயிரிழந்தாா்.

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன் (43). இவா் சுப நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்யும் தொழில் செய்து வந்தாா். இந்நிலையில், பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தனியாக வசிக்கும் தனது அத்தை வீட்டில் தங்கி பணிக்குச் சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், புதுசித்தாபுதூா் தனலட்சுமி நகா், எம்எஸ்எஸ் மையம் வழியாக தனியாா் பாா்சல் சா்வீஸ் லாரி புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் சென்றது. அப்போது, அங்கு மேலே சென்ற மின் கம்பி மீது லாரி உரசியதில் அந்தக் கம்பி அறுந்து அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது விழுந்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு வியாழக்கிழமை காலை வந்த பிரபாகரன், மின் கம்பி இருப்பதை அறியாமல் வாகனத்தின் மீது கை வைத்துள்ளாா். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் பிரபாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.