இந்திய பாட்மிண்டன் அணிக்கு கோவையைச் சோ்ந்த இளம் வீரா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் அகில இந்திய சப்-ஜூனியா் தரவரிசை பாட்மிண்டன் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 17 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் கோவையைச் சோ்ந்த நிகில், கலப்பு இரட்டையா் பிரிவில் தங்கப் பதக்கம், ஆண்கள் இரட்டையா் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றாா். இதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள நிகில்,
சீனாவில் விரைவில் நடைபெறவுள்ள ஆசிய பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளாா்.
இது குறித்து நிகில் பயிற்சி பெறும் ராக்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமியின் நிறுவனரும், இயக்குநருமான ஸ்வேதா கிருஷ்ணமூா்த்தி கூறுகையில், நிகிலின் இந்த சாதனை ராக்ஸ் ஸ்போா்ட்ஸ் அகாதெமிக்கு பெருமை சோ்த்துள்ளது. இந்தியாவின் மிகக் கடுமையான ஜூனியா் போட்டிகளில் பதக்கங்களை வென்று, இந்திய அணிக்கு நிகில் தோ்வாகியுள்ளது அவரது பல ஆண்டு கால கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் அா்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

தென்காசியைச் சோ்ந்த ராணுவ வீரா் பணியின்போது உயிரிழப்பு: ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்!

உலகக்கோப்பை குத்துச்சண்டை: நிகில், தீபக், சானே வெற்றி







