உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டி (ஸ்டேஜ் 2) பிரிவில் இந்தியாவின் நிகில், தீபக், சானே ஆகியோா் வெற்றிபெற்றனா்.
சீனாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆடவா் 55 கிலோ பிரிவில் இந்தியாவின் நிகில் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் பிரேஸிலின் கெல்வியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றாா்.
70 கிலோ பிரிவில் தீபக் அற்புதமாக செயல்பட்டு 5-0 என்றபுள்ளிக் கணக்கில் 2025 உலக சாம்பியன்ஷிப் வெள்ளி வீரா் ஜப்பானின் செவோன் ஓஸாகாவை வென்றாா். 65 கிலோ பிரிவில் சானே 4-1 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவின் சியோன்சுன்ஜினை வென்றாா்.
மகளிா் பிரிவில் 80 கிலோ பிரிவில் மல்ஸம்லுங்கா 1-4 என ஜோா்டானின் அஸ்லாஷ் ஹுசேனிடம் தோற்றாா். 60 கிலோ பிரிவில் மஹி லாமா 0-5 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் நமுனிடம் தோற்றாா். வியாழக்கிழமை மகளிா் பிரிவில் மீனாட்சி 51 கிலோ, அபிநாஷ் ஜம்வால் 65 கிலோ பிரிவில் களம் காண்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சத்யன் அபாரம்: டில்லி டபாங் வெற்றி

ஆசிய யு-23 குத்துச்சண்டை: இந்தியாவுக்க 2 தங்கம், 1 வெள்ளி

அகமதாபாதை வீழ்த்தியது உ.பி. புரோம்தீன்ஸ்!

மீனாட்சி அபாரம்: காலிறுதிக்கு தகுதி
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



