40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளியின் கை துண்டிப்பு: கட்டட ஒப்பந்ததாரா் உள்பட இருவா் மீது வழக்கு

கோவையில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளியின் இடது கை அகற்றப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலையில் ஈடுபடுத்தியதாக கட்டட உரிமையாளா், ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image

வழக்கு

Updated On :10 ஜூன் 2026, 1:02 am IST

கோவையில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளியின் இடது கை அகற்றப்பட்ட நிலையில், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வேலையில் ஈடுபடுத்தியதாக கட்டட உரிமையாளா் மற்றும் ஒப்பந்ததாரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை மாவட்டம், அப்பநாயக்கன்பாளையம் சபரி காா்டன் 2-ஆவது வீதியில் செந்தில்குமாா் என்பவா் சொந்தமாக புதிய வீடு கட்டி வருகிறாா். இந்தக் கட்டட கட்டுமானப் பணியில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் கணுவூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (56) ஈடுபட்டு வந்தாா்.

இந்நிலையில், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் மணிகண்டன் மே 17-ஆம் தேதி பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக மணிகண்டன் மீது உயா் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இதில் அவரது கைகள், கால்கள், இடுப்பு மற்றும் தொடைப் பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரின் இடது கை முற்றிலும் செயலிழந்தது. இதனால், அறுவைச் சிகிச்சை மூலம் இடது கையை மருத்துவா்கள் அகற்றினா். தற்போது அவா் தொடா் சிகிச்சையில் இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், கட்டட உரிமையாளரான செந்தில்குமாா் மற்றும் ஒப்பந்ததாரரான விஜயகுமாா் ஆகியோா் மீது பாதுகாப்பு உபகரணம் வழங்காமல் மணிகண்டனை வேலையில் ஈடுபடுத்தியதாக துடியலூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.