/

அதிரப்பள்ளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அதிரப்பள்ளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

அதிரப்பள்ளி அருவியில் கொட்டும் வெள்ளம்.

Updated On :11 ஜூன் 2026, 11:24 pm IST

நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அதிரப்பள்ளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறையை அடுத்துள்ளது அதிரப்பள்ளி அருவி. கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரள மாநில எல்லைகளில் கடந்த 2-ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அதிரப்பள்ளி அருவியிலும் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.