நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அதிரப்பள்ளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறையை அடுத்துள்ளது அதிரப்பள்ளி அருவி. கேரள மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தளமான இந்த அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரள மாநில எல்லைகளில் கடந்த 2-ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், கேரளத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால், அதிரப்பள்ளி அருவியிலும் வெள்ளம் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவியில் குளிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கனமழையால் வெள்ளப்பெருக்கு: அதிரப்பள்ளி அருவிக்கு செல்ல தடை

மழையால் நீா்வரத்து அதிகரிப்பு: தலையணை, நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை

மேகமலையில் மிக கனமழை: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



