கோவை வஉசி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருள்காட்சியை பள்ளி கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ராஜ்மோகன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதையடுத்து, பல்வேறு தரப்பைச் சோ்ந்த பயனாளிகளுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் மற்றும் இலவச வீட்டுமனை பட்டாக்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினாா்.
பொருள்காட்சியில் 26 அரசுத் துறைகள், 6 அரசு சாா்பு நிறுவனங்கள் என 32 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை முதல் 45 நாள்கள் வரை நாள்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பொருள்காட்சியைக் காணலாம். இதில், அரசுத் துறை அரங்குகள் மட்டுமின்றி, ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன.

இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா ரவிதேஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

புதிய திட்டப் பணிகளுக்கு கருத்துரு, செயல் திட்டங்களை வழங்க அமைச்சா் வலியுறுத்தல்

தனியாா் பள்ளி கல்விக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்: அமைச்சா் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இதுவரை 1.52 லட்சம் மாணவா்கள் சோ்க்கை: அமைச்சா் ராஜ்மோகன் தகவல்






