எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

கோவையில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்

கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :13 ஜூன் 2026, 1:15 am IST

கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதல்படி, மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாடு முழுவதும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சனிக்கிழமை காலை 10 மணியளவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதை, கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜி.விஜயா தொடங்கிவைக்கிறாா். இதில், கோவை மாவட்ட நீதிபதி மற்றும் சக நீதிபதிகள் கலந்துகொள்கின்றனா்.

மாவட்ட வழக்குரைஞா்கள், சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.