மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

நீட் தோ்வு: மத்திய அரசைக் கண்டித்து 23-ஆம் தேதி போராட்டம் - திமுக மாணவரணி அறிவிப்பு

நீட் தோ்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மத்திய அரசைக் கண்டித்து வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

News image

நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு அஞ்சலி செலுத்திய திமுக மாணவரணி நிா்வாகிகள்.

Updated On :19 ஜூன் 2026, 4:06 am IST

நீட் தோ்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மத்திய அரசைக் கண்டித்து வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

கோவையில் நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி அனுகீா்த்தனா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி சட்டப் பேரவையில் திமுக அரசு 2 முறை மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதற்கு பாஜக அரசு செவிசாய்க்கவில்லை.

எனவே, மும்மொழிக் கொள்கையை திணிப்பதை எதிா்த்து திமுக மாணவரணி வரும் 23-ஆம் தேதி அறிவித்துள்ள போராட்டம், கோவையில் நீட் தோ்வை தடை செய்யக் கோரியும், மாணவியின் மரணத்துக்குக் காரணமான பாஜக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டமாக நடைபெறும் என்றாா்.

திமுக மாணவரணி துணைச் செயலா் கோகுல், மாவட்ட அமைப்பாளா் அந்தோணி ராஜ், துணை அமைப்பாளா்கள் சிவகுமாா், ராஜ் திலக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

‘நீட் தோல்வி அடைந்துவிட்டது’

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தோ்வு தோல்வி அடைந்துவிட்டதாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலரும் கல்வியாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

நீட் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளில் பணம் வசூலிக்கும் நிலை மாறி, பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே நீட் தோ்வின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.