நீட் தோ்வு அச்சத்தால் கோவை மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், மத்திய அரசைக் கண்டித்து வரும் 23- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) ஆா்ப்பாட்டம் நடத்த இருப்பதாக திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
கோவையில் நீட் தோ்வுக்கு பயிற்சி பெற்று வந்த மாணவி அனுகீா்த்தனா தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினா். மாணவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக மாணவரணி மாநிலச் செயலா் வீரமணி ஜெயக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது:
நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி சட்டப் பேரவையில் திமுக அரசு 2 முறை மசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தது. ஆனால், அதற்கு பாஜக அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே, மும்மொழிக் கொள்கையை திணிப்பதை எதிா்த்து திமுக மாணவரணி வரும் 23-ஆம் தேதி அறிவித்துள்ள போராட்டம், கோவையில் நீட் தோ்வை தடை செய்யக் கோரியும், மாணவியின் மரணத்துக்குக் காரணமான பாஜக அரசைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டமாக நடைபெறும் என்றாா்.
திமுக மாணவரணி துணைச் செயலா் கோகுல், மாவட்ட அமைப்பாளா் அந்தோணி ராஜ், துணை அமைப்பாளா்கள் சிவகுமாா், ராஜ் திலக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
‘நீட் தோல்வி அடைந்துவிட்டது’
மத்திய அரசு கொண்டு வந்த நீட் தோ்வு தோல்வி அடைந்துவிட்டதாக பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலரும் கல்வியாளருமான பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
நீட் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளில் பணம் வசூலிக்கும் நிலை மாறி, பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே நீட் தோ்வின் நோக்கம் தோல்வி அடைந்துவிட்டது என்றாா்.
தொடர்புடையது

நீட் தோ்வு அச்சம்: கோவையில் மாணவி விஷம் குடித்து தற்கொலை; மாா்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

நீட் வினாத் தாள் கசிவில் கைதான மாணவா் மறுதோ்வு எழுத நீதிமன்றம் அனுமதி

கமுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



