ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

போதை மாத்திரை விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 ஜூன் 2026, 2:48 am IST

கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்ய முயன்ற 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 220 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.

கோவை செல்வபுரம் போலீஸாா் அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள வாகன எடை மேடை’அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேரைப் பிடித்து போலீஸாா் சோதனை நடத்தினா்.

அவா்களிடம் மருத்துவப் பரிந்துரை இன்றி சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 220 போதை மாத்திரைகள் இருந்தன. விசாரணையில், அவா்கள் இடையா்பாளையம் சௌடாம்பிகை நகரைச் சோ்ந்த சஞ்சீவ்குமாா், சுக்கிரவாா்பேட்டை பட்டுப்பூச்சி லைன் பகுதியைச் சோ்ந்த தீபக்குமாா் (24) மற்றும் செல்வபுரம் வடக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சோ்ந்த ஹரி பிரசாந்த் (28) என்பது தெரியவந்தது.

இதையடுத்த மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து, மாத்திரைகள் மற்றும் ரூ.17,650 ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.