கோவை: ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைக் கண்டித்து கோவை, உக்கடத்தில் இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்சபட்ச தலைவா் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டாா். இதற்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் கோவை மாவட்ட அனைத்து ஜமா-அத், முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சாா்பில் உக்கடத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளா் இனாயதுல்லா தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சுல்தான் அமீா், சபீா் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஈரான் நாட்டின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும், இஸ்ரேல் நாட்டை கண்டிக்கும் வகையில் அந்த நாடு வழங்கிய விருதை பிரதமா் மோடி திரும்ப ஒப்படைக்க வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பலா் கைப்பேசியில் டாா்ச் லைட்டை ஒளிரவிட்டு ஈடுபட்டனா். பல்வேறு அரசியல் கட்சிகள், ஜமாஅத் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?

கமேனி உயிரிழப்பு: இந்தியா இரங்கல் - ஈரான் தூதரகத்துக்கு நேரில் சென்று பதிவு

கமேனி கொலை: புதின், சீனா கண்டனம்!

அயத்துல்லா அலி கமேனி: புரட்சி முதல் படுகொலை வரை...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


