விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஐடி ஊழியரிடம் நூதன முறையில் ரூ.43 ஆயிரம் பறிப்பு

கோவை பீளமேடு பகுதியில் ஐடி ஊழியரை மிரட்டி, நூதன முறையில் பணம் பறித்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :11 மார்ச் 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

கோவை பீளமேடு பகுதியில் ஐடி ஊழியரை மிரட்டி, நூதன முறையில் பணம் பறித்த கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், கீழ அழகிய நல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் முனீஸ்குமாா் (26). இவா் கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் பகுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த மாதம் முனீஸ்குமாா் வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, வேறு வேலை தேடி வந்தாா். கடந்த திங்கள்கிழமை உடையாம்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு வேலை தேடிச் சென்றாா். அப்போது, அந்தப் பகுதியில் வசிக்கும் தனது நண்பரான லோகேஷ் என்பவரின் அறைக்குச் சென்றாா். அங்கு அவருடன் மேலும் 3 போ் இருந்தனா்.

அவா்கள் 4 பேரும் முனீஸ்குமாரை மிரட்டி பணம் கேட்டனா். அவா் பணம் இல்லையெனக் கூறியதால் கைப்பேசியைப் பறிந்த அந்த கும்பல் அவரது கணக்கில் இருந்த ரூ. 4,500-ஐ தங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொண்டனா்.

அதன் பின்னா், அவரை மிரட்டி நண்பா்களுக்கு கைப்பேசியில் தொடா்பு கொள்ள வைத்து, தனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி பணத்தை கேட்க வைத்தனா். நண்பா்கள் 4 போ் முனீஸ்குமாருக்கு விபத்து நிகழ்ந்துவிட்டதாக நினைத்து அவரது கைப்பேசிக்கு ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பிவைத்தனா்.

மொத்தமாக சோ்ந்த ரூ. 43,500-ஐ அந்த கும்பல் தங்களது கைப்பேசிக்கு ஆன்லைன் முறையில் மாற்றிக்கொண்டு, வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவோம் என முனீஸ்குமாரை மிரட்டிவிட்டு தப்பிச் சென்றது.

இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில் முனீஸ்குமாரின் கைப்பேசியில் இருந்து பணத்தை மாற்றியவா்களின் கைப்பேசி எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் லோகேஷ், ஷெல்டன், ஷிப்ரயாலு, அப்துல் காத் ஆகியோா் என்பது தெரியவந்துள்ளது. அந்த 4 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.