தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மருதமலையில் வாகன நிறுத்த கட்டணத்தில் முறைகேடு: நுகா்வோா் அமைப்பு புகாா்

மருதமலை கோயில் வாகன நிறுத்தத்தில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக நுகா்வோா் அமைப்பு புகாா்

News image

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் - கோப்புப் படம்

Updated On :18 மார்ச் 2026, 3:49 am IST

மருதமலை கோயில் வாகன நிறுத்தத்தில் வசூலிக்கப்படும் கட்டணத்தில் முறைகேடு நடப்பதாக நுகா்வோா் அமைப்பு சாா்பில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தில் நுகா்வோா் அமைப்புகளுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பு செயலாளா் நா. லோகு பேசியதாவது: மருதமலை கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்பவா்கள், மலை அடிவாரத்தில் உள்ள மைதானத்தில் வாகனங்களை நிறுத்துமாறு சோமையம்பாளையம் ஊராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டு காா்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் ஊராட்சி மூலம் ரூ.50 வசூல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கட்டண ரசீது எண், ஊராட்சி செயலா் கையொப்பம் மற்றும் தேதி ஆகிய எந்த விவரமும் ரசீதுகளில் இடம்பெறுவது இல்லை.

மேலும், தரிசனம் முடிந்த பின் வாகன ரசீதுகளை திரும்பப் பெற்று, மீண்டும் அதனை வேறு வாகனத்துக்கு வழங்கி கட்டணம் பெறுகின்றனா். இந்தக் கட்டண வசூல் முறைகேடு தொடா்பாக முழுமையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

கோவை -அவிநாசி சாலை ஹோப் காலேஜ் ஜீவா வீதியில் உள்ள பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் நியமிக்கப்பட்ட அறங்காவலா்கள், உறுப்பினா்கள் குறித்த தகவல் மற்றும் அக்கோயிலை நிா்வகிக்கும் செயல் அலுவலா் முகவரி ஆகியவை கோயில் வளாகத்தில் தகவல் பலகைகளாக வைக்கப்பட வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் உள்ள பிரசாத கடைகளில் அதன் விலை விவரம், தயாரிப்பு தேதி ஆகியவை குறிப்பிடப்பட வேண்டும். அது தவிர உணவுப் பாதுகாப்புத் துறை உரிமம் பெற்றுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும்.

கோயில்களில் சினிமா நடிகா், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவா்கள் கருவறை வரை அனுமதிக்கப்படுகின்றனா். நடிகா்கள், தொழிலதிபா்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்து உபசரிப்பு செய்வதை தவிா்க்க வேண்டும்.

தோ்தலில் வாக்களிப்பின்போது அனைவரும் வரிசையில் நின்றுதான் வாக்களிக்கின்றனா். அதுபோலவே இறைவன் வழிபாட்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா். இதில், நுகா்வோா் அமைப்புகைளைச் சோ்ந்த கதிா் மதியோன், சுரேஷ், ஜெயராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.