எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News image

எரிவாயு சிலிண்டா் - (கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:54 pm

மாவட்டத்தில் சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் மணிகுமாா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். வணிக சிலிண்டா்கள் கிடைக்காமல் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளன.

சிலிண்டா் ஏஜென்ஸிகள் கைவிரித்துள்ள நிலையில், மக்கள் திண்டாடி வருகின்றனா். சிலிண்டா் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சிலிண்டா் தட்டுப்பாடு நிலவும் நிலையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் சிலிண்டா்கள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.