விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

News image

எரிவாயு சிலிண்டா் - (கோப்புப் படம்)

Updated On :24 மார்ச் 2026, 2:24 am IST

மாவட்டத்தில் சிலிண்டா்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல்லடம் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவா் மணிகுமாா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சிலிண்டா்கள் தட்டுப்பாட்டால் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். வணிக சிலிண்டா்கள் கிடைக்காமல் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளன.

சிலிண்டா் ஏஜென்ஸிகள் கைவிரித்துள்ள நிலையில், மக்கள் திண்டாடி வருகின்றனா். சிலிண்டா் தட்டுப்பாட்டால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. இது ஏழை, எளிய மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக சிலிண்டா் தட்டுப்பாடு நிலவும் நிலையில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அனைத்து மக்களுக்கும் சிலிண்டா்கள் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.