வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நாம் தமிழா் கட்சியில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி

News image

வால்பாறையில் நடைபெற்ற நாதக அறிமுக கூட்டத்தில் பேசுகிறாா் வேட்பாளா் உமாதேவி. உடன் கலைச்செல்வி (இடமிருந்து நான்காவது) உள்ளிட்டோா்.

Updated On :29 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி நாம் தமிழா் கட்சியில் இணைந்தாா்.

கோவை மாவட்டம், வால்பாறை சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த அதிமுகவைச் சோ்ந்த அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்தாா். அவரது மனைவி கலைச்செல்வி நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வால்பாறை தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தாா். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இதனிடையே வால்பாறை தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உமாதேவி அறிமுக கூட்டம் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் மேத்யூ தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் எம்எல்ஏ அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, தனக்கு அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் நாம் தமிழா் கட்சியில் இணைந்ததாகத் தெரிவித்தாா்.