கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏப்ரல் 2-ஆம் தேதி காலை 7.05 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்படும் ஹூப்ளி - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07347) மறுநாள் காலை 7 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.
மறு மாா்க்கமாக, ஏப்ரல் 3 காலை 10.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - ஹூப்ளி சிறப்பு ரயில்( எண்: 07348) மறுநாள் காலை 10.40 மணிக்கு ஹூப்ளி நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயிலானது, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், குப்பம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூரு, பிரூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்!

கொல்லம் - விசாகப்பட்டினம் ரயில் இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் நின்று செல்லும்!

போத்தனூா்-தன்பாத் அம்ருத் பாரத் ரயில் மாா்ச் 21 முதல் இயக்கம்

கோவை வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சந்திராகாட்சி இடையே சிறப்பு ரயில்
வீடியோக்கள்

அடாவடி விடியோ பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

கத்தனார் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

“BJPயைப் பார்த்து பயப்படத் தேவையில்லை”: AMMK வேட்பாளர் செந்தமிழன் பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

#tnassemblyelections | வேட்புமனு தாக்கல் செய்த முக்கியத் தலைவர்கள்! |
தினமணி வீடியோ செய்தி...

