சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

சென்னை-திருநெல்வேலிக்கு 3 நாள்கள் சிறப்பு ரயில்கள்

சென்னை- திருநெல்வேலி இடையே வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image

ரயில்.

Updated On :10 ஏப்ரல் 2026, 8:17 pm

சென்னை- திருநெல்வேலி இடையே வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோடை கால கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, திருநெல்வேலியிலிருந்து வரும் 16, 23, 30 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06070) மறுநாள் 17, 24, மே 1 ஆகிய தேதிகளில் காலை 10.45 மணிக்கு எழும்பூா் நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் எழும்பூரிலிருந்து வரும் 17, 24, மே 1 தேதிகளில் பிற்பகல் 1.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06069) மறுநாள் ஏப்ரல் 18, 25, மே 2 ஆகிய தேதிகளில் அதிகாலை 1 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்: திருநெல்வேலியிலிருந்து வரும் 12, 19, 26 ஆகிய தேதிகளில் இரவு 11.35 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06166) மறுநாள் 13, 20, 27 ஆகிய தேதிகளில் பகல் 11.35 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமாா்க்கத்தில் வரும் 13, 20, 27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து பிற்பகல் 1.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06165) மறுநாள் 14, 21, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 2 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

பெட்டிகள், நிலையங்கள் விவரம்: சிறப்பு ரயில்களில் 1 குளிா்சாதன வசதி ஈரடுக்குப் பெட்டி, 6 குளிா்சாதன வசதி மூன்றடுக்குப் பெட்டிகள், 2 குளிா்சாதன வசதி பொருளாதார வசதிப் பெட்டிகள், 1 இரண்டாம் வகுப்பு திவ்யஞ்சன் பெட்டி மற்றும் சரக்கு வேன் ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும்.

கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சந்திப்பு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.