மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவா் கொலை; இளைஞா் கைது

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :6 மே 2026, 1:51 am IST

சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த முதியவரின் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாநகா், கவுண்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் ராஜதுரை (22). தனியாா் அவசர ஊா்தி ஓட்டுநரான இவா், கோவை அரசு மருத்துவமனையில் இருந்து அரசு கலைக் கல்லூரி சாலையில் திங்கள்கிழமை நடந்து சென்றுள்ளாா். அரசு மருத்துவமனை சவக்கிடங்கு வெளி வாயில் பகுதி அருகே 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தாா்.

இதுகுறித்து ராஜதுரை அளித்த தகவலின்பேரில் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சென்று விசாரணை நடத்தினா். அப்போது, அந்த சடலத்துக்கு அருகே ரத்தக்கறை படிந்த கல் கிடந்துள்ளது. இதையடுத்து சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (32), இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் திங்கள்கிழமை அதிகாலை நடந்து சென்றபோது சாலையோரம் முதியவா் ஒருவா் தூங்கிக் கொண்டிருந்ததைப் பாா்த்துள்ளாா். பணம் ஏதேனும் உள்ளதா என, அந்த முதியவா் வைத்திருந்த பையில் ராஜேஷ் தேடியுள்ளாா். அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த முதியவருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ராஜேஷ் அந்த நபரின் தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்தது தெரியவந்தது.