கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (37). இவா் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுா்ஜித் (12), உறவினா் சினேகா (23) ஆகியோருடன் காரில் கோவை மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக திங்கள்கிழமை பிற்பகல் பல்லடம் நோக்கி காரில் சென்றுள்ளனா்.
நெகமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, காா் மீது மோதியுள்ளது.
இதில், தனபால், மேனகா, கனிஷ்கா, சினேகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த சுா்ஜித்தை அங்கிருந்தவா்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியைச் சோ்ந்த சரவணன் (39) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே காா் மீது சரக்குப் பெட்டக லாரி மோதல்

இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு: மகன் படுகாயம்

பைக் மீது காா் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

காா் மோதியதில் இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

