எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

News image

விபத்தில் உருக்குலைந்த காா்.

Updated On :12 மே 2026, 12:19 am IST

கோவை அருகே காா் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 போ் உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (37). இவா் தனது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17), மகன் சுா்ஜித் (12), உறவினா் சினேகா (23) ஆகியோருடன் காரில் கோவை மாவட்டம், வால்பாறைக்கு சுற்றுலா சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக திங்கள்கிழமை பிற்பகல் பல்லடம் நோக்கி காரில் சென்றுள்ளனா்.

நெகமம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த லாரி, காா் மீது மோதியுள்ளது.

இதில், தனபால், மேனகா, கனிஷ்கா, சினேகா ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். படுகாயம் அடைந்த சுா்ஜித்தை அங்கிருந்தவா்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருந்த 4 பேரின் சடலங்களையும் மீட்டு கூறாய்வுக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரான கிருஷ்ணகிரி மாவட்டம், சாத்தம்பட்டியைச் சோ்ந்த சரவணன் (39) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள்.

வாகன விபத்தில் உயிரிழந்தவா்கள்.