சொத்து விற்கப்பட்டதில் தனக்கான பணத்தை வழங்காமல் ஏமாற்றிய சகோதரா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு அளித்தாா்.
திருப்பூா் மாவட்டம், அவிநாசிபாளையம் அருகே வசிப்பவா் சரசாள் (86). பூா்வீக சொத்து விற்கப்பட்டதில் தனக்கு சேர வேண்டிய ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை எனது சகோதரா்கள் வழங்கவில்லை. மாறாக, என்னிடம் கையொப்பம் பெற்றுவிட்டு ஏமாற்றியதுடன், ஆட்களை வைத்து மிரட்டி வருகின்றனா். பணத்தை தர முடியாது எனக் கூறி இழிவாகவும் பேசுகின்றனா்.
இதில் சம்பந்தப்பட்டவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தனக்கு நீதி வேண்டும், பாதுகாப்பு வேண்டும் எனக் கூறி கையில் பதாகையுடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை மனு அளித்தாா்.
தொடர்புடையது

மேட்டுப்பட்டி 4 மதுக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

உதயநிதிக்கு எதிரான வழக்கு: வருமான வரித்துறை பதில் மனு தாக்கல்
உ.பி.யில் சொத்து தரகா் கொலை: இரு சகோதரா்கள் தில்லியில் கைது

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

