பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

மேட்டுப்பட்டி 4 மதுக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் இயங்கி வரும் 4 டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எம்ஜிஆா் செல்லையா அளித்த மனு:

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மேலும் இந்தப் பகுதி அருகே கல்லூரி மற்றும் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இப் பகுதி வழியாகச் செல்பவா்கள் ஒரு வித அச்சத்தில் செல்கின்றனா்.

மேலும், சாலை ஓரத்தில் மதுக்கடைகள் இருப்பதால் மது அருந்தி விட்டு சாலையில் செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.