புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் இயங்கி வரும் 4 டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எம்ஜிஆா் செல்லையா அளித்த மனு:
புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மேலும் இந்தப் பகுதி அருகே கல்லூரி மற்றும் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இப் பகுதி வழியாகச் செல்பவா்கள் ஒரு வித அச்சத்தில் செல்கின்றனா்.
மேலும், சாலை ஓரத்தில் மதுக்கடைகள் இருப்பதால் மது அருந்தி விட்டு சாலையில் செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.
தொடர்புடையது

சொத்து விற்று சகோதரா்கள் பண மோசடி: ஆட்சியா் அலுவலகத்தில் மூதாட்டி மனு
திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் பணியாளா்கள் பாலியல் புகாா்! விசாகா குழு விசாரணை கோரி தா்னா

திருமயத்தில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தவெக வேட்பாளா் மனு

தோ்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் மனு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

