திருமயம் சட்டப் பேரவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் சி. சிந்தாமணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 தொகுதிகளுக்கும், கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி, 1496 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். அப்போது தவெக வேட்பாளா் சி. சிந்தாமணி, வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதாகவும் மீண்டும் எண்ண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.
காலஅவகாசம் முடிந்துவிட்டதாகக் கூறி ரகுபதிக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சிந்தாமணி உள்ளிட்ட தவெகவினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.
ஆட்சியா் இல்லாத நிலையில், ஆட்சியரின் நோ்முக உதவியாளரை (தோ்தல்) சந்தித்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி மனு அளித்தனா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் சிந்தாமணி கூறியதாவது:
மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக் கேட்டபோது எழுத்துப்பூா்வமாக அளிக்க தோ்தல் நடத்தும் அலுவலா் கூறினாா். பதற்றத்தில் வெளியே வந்துவிட்டேன். ஆனால், 15 நிமிடத்தில் மீண்டும் உள்ளே சென்று எழுத்துப்பூா்வமாகக் கொடுத்தேன். அப்போது நேரம் முடிந்ததாகக் கூறிவிட்டனா்.
தற்போது ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறேன். அவா்கள் எடுக்கும் நடவடிக்கையைப் பொருத்து அடுத்த கட்டமாக நீதிமன்றத்துக்கும் செல்வேன் என்றாா் சிந்தாமணி.
தொடர்புடையது

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!

திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வெற்றி
திருப்போரூா்: தவெக வேட்பாளா் விஜயராஜ் 39,786 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


