திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் பணியாளா்கள் அளித்த பாலியல் புகாா் தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியும், இதுதொடா்பாக விசாகா குழு விசாரணை கோரியும் திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயல்படும் டி.என்.ரைட்ஸ் திட்டத்தில் பணிபுரியும் பெண் களப் பணியாளா்களுக்கு எதிராக தொடா்ந்து பாலியல் தொல்லைகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டு மனு அளித்தனா்.
சுமாா் 170 பெண் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விசாகா குழு மூலமாக ரகசிய விசாரணை நடத்தவும், குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனா்.
மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய புதிதாக அமைந்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டு மனு அளித்தனா்.
தொடர்புடையது

மேட்டுப்பட்டி 4 மதுக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

மின்னஞ்சலில் மிரட்டல்: சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

கோவை ஆட்சியா் அலுவலகத்துக்கு 34-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
காதலிப்பதாகக் கூறி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை! எஸ்.பி. அலுவலகத்தில் பெற்றோா் புகாா்!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
