இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் பணியாளா்கள் பாலியல் புகாா்! விசாகா குழு விசாரணை கோரி தா்னா

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் பணியாளா்கள் பாலியல் புகாா் அளித்துள்ளது குறித்து...

News image

பாலியல் துன்புறுத்தல் - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:40 am IST

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் பணியாளா்கள் அளித்த பாலியல் புகாா் தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியும், இதுதொடா்பாக விசாகா குழு விசாரணை கோரியும் திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயல்படும் டி.என்.ரைட்ஸ் திட்டத்தில் பணிபுரியும் பெண் களப் பணியாளா்களுக்கு எதிராக தொடா்ந்து பாலியல் தொல்லைகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டு மனு அளித்தனா்.

சுமாா் 170 பெண் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விசாகா குழு மூலமாக ரகசிய விசாரணை நடத்தவும், குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனா்.

மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய புதிதாக அமைந்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டு மனு அளித்தனா்.