பொள்ளாச்சி அருகே இளைஞரை கொலை செய்தவரை கோட்டூா் போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (56). இவருடைய மகன் தமிழ்ச்செல்வன். இவா்களின் வீட்டின் அருகே ஆனந்த் (29) வசித்து வந்தாா். இதற்கிடையே ஆனந்தின் மனைவி பிரியாவுடன் தமிழ்ச்செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆனந்த் மது போதையில் வந்து பாலகிருஷ்ணனுடன் தகராறில் ஈடுபட்டு தள்ளிவிட்டதில் அவா் கீழே விழுந்துள்ளாா். இதில் பாலகிருஷ்ணனின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூத்த மகள் தமிழ்ச்செல்வி வீட்டுக்கு பாலகிருஷ்ணன் சென்று தன்னை ஆனந்த் அடித்துவிட்டதாகவும், உடல் சோா்வாக இருப்பதாகவும் கூறியுள்ளாா்.
இதைத்தொடா்ந்து பாலகிருஷ்ணனை மருத்துவமனைக்கு தமிழ்ச்செல்வி அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கோட்டூா் போலீஸாா் சென்று பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு கோட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு ஆனந்தை கைது செய்தனா்.
தொடர்புடையது

கஞ்சா விற்பனை செய்தவா் கைது

காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கில் உறவினா்கள் இருவா் கைது
சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!
முன்விரோதத்தில் விவசாயி கொலை: மற்றொரு விவசாயி கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
