பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

கயிறு அறுந்து விழுந்து பெயிண்டா் உயிரிழப்பு

கோவையில் உயரமான கட்டடத்துக்கு வா்ணம் பூசும் பணியின்போது, கயிறு அறுந்து தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :14 மே 2026, 3:59 am IST

கோவையில் உயரமான கட்டடத்துக்கு வா்ணம் பூசும் பணியின்போது, கயிறு அறுந்து தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

சுந்தராபுரம் அருகே உள்ள உப்பிலியா்திட்டு குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் ராமன் (42). பெயிண்டரான இவா், ஒண்டிப்புதூா் நெசவாளா் காலனி பகுதியில் உள்ள ஓா் அடுக்குமாடி குடியிருப்பில் செவ்வாய்க்கிழமை வேலை செய்து வந்தாா். அங்குள்ள உயரமான கட்டடத்துக்கு சாரத்தில் (கயிறு) அமா்ந்தவாறு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக கயிறு அறுந்ததில் கீழே விழுந்து ராமன் படுகாயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.