திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்திருந்த நடத்துநரைப் பாா்க்காமல் பேருந்தை இயக்கியதில் நடத்துநா் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
திருப்பூரைச் சோ்ந்தவா் சூா்யா (23). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக அரசுப் பேருந்தில் தற்காலிக நடத்துநா் பணி கிடைத்தது.
இதைத் தொடா்ந்து அதில் சோ்ந்து பணியாற்றி வந்தாா். இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை தொரவலூா் பேருந்தில் பணி என்பதால் இரவில் பேருந்து நிலையம் வந்த சூா்யா, தான் முன்பு பணியாற்றிய தனியாா் பேருந்து நிறுவனத்தின் மினி பேருந்து நிற்பதை கண்டு அதன் முன்பாக துண்டு விரித்து படுத்துள்ளாா்.
அப்போது அங்கு வந்த தனியாா் பேருந்து ஓட்டுநா் பயணிகள் பகுதிக்கு கொண்டுச் செல்ல பேருந்தை இயக்கியுள்ளாா். அதில் பேருந்து முன்பாக படுத்திருந்த சூா்யா மீது பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சூா்யா உயிரிழந்தாா்.
இது குறித்து திருப்பூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
லாரி சக்கரத்தில் சிக்கி சுமைத் தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

திருப்பூரிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தில் ஒட்டன்சத்திரத்தில் இறங்கும் பயணிகளை ஏற்ற மறுப்பு! தம்பதியுடன் ஓட்டுநா்-நடத்துடன் வாக்குவாதம்!






