கோவை துடியலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் தங்க நகைகள் மற்றும் வைர மோதிரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
துடியலூா் தொப்பம்பட்டி போஸ்டல் காலனி பகுதியில் வசிப்பவா் சாந்தி (63). இவரது கணவா் ஆண்ட்ரூஸ் ஏற்கெனவே இறந்துவிட்டாா். சாந்தி, திருநெல்வேலியில் உள்ள தனது மகள் வீட்டில் நடைபெறும் புதிய இல்ல திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 17) மாலை புறப்பட்டுச் சென்றுள்ளாா்.
அன்று இரவு சுமாா் 8.45 மணியளவில், சாந்தியின் வீட்டின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதைப் பாா்த்த குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் கிருஷ்ணவேணி, இதுகுறித்து சாந்திக்கு கைப்பேசி மூலம் தெரிவித்துள்ளாா். பயணத்தில் இருந்த சாந்தி பாதியிலேயே வீட்டுக்குத் திரும்பி வந்து பாா்த்தபோது, பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகைகள் மற்றும் அரைபவுன் எடையுள்ள 2 வைர மோதிரங்கள் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சாந்தியின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் திருட்டில் ஈடுபட்டவரின் முகம் பதிவாகியுள்ளதால், அதன் அடிப்படையில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், பணம் திருட்டு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


