தமிழக வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் லேசான காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த இரு நாள்களுக்கு முன்பு சென்னையிலிருந்து கோவைக்கு வந்தாா். பின்னா், சென்னைக்கு மீண்டும் திரும்புவதற்காக கோபியிலிருந்து அவா் சனிக்கிழமை இரவு கோவைக்கு வந்தாா். அப்போது, அவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால், விமான நிலையம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, தற்போது காய்ச்சல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் தெரிவித்துள்ளதாவது:
அமைச்சா் செங்கோட்டையனின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. திங்கள்கிழமை காலை அவா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மின்வெட்டு பிரச்னைக்கு கடந்த திமுக ஆட்சியே காரணம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சா் திடீா் ஆய்வு
அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!

அமைச்சர் செங்கோட்டையனின் துறை மாற்றம்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



